தமிழ்நாடு

தி. நகர் சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ள நீரை அகற்றும் பணி மும்முரம்

JustinDurai

சென்னை தி. நகரில் மேட்லி சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றி, சுத்தபடுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் பெய்த கனமழை காரணமாக தி நகர் பகுதியில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையில் 10 அடி அளவிற்கு மழை வெள்ள நீர் நிரம்பியதால், அன்றிரவு 8 மணி முதல் சுரங்கப்பாதையில் அனைத்து வகையான வாகன போக்குவரத்தும், பாதசாரிகள் தடை செய்யப்பட்டது.

சுரங்கப்பாதையில் உள்ள தண்ணீர் இரண்டு நாட்களாக மோட்டார் பம்புகள் மூலம் அகற்றப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் பெருமளவு குறைந்துள்ளது. மீதமுள்ள தண்ணீரையும், தேங்கியுள்ள குப்பைகளையும் அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரங்களுடன் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதசாரிகள் செல்வதற்கான நடைபாதை மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவுக்குள் மேட்லி சுரங்கப்பாதையில் அனைத்து வகையான போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்படும் என மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.