தமிழ்நாடு

பப்ஜி மதனை தீவிரமாக தேடி வருகிறோம்: சென்னை காவல் ஆணையர்

JustinDurai

யூ-டியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ”தலைமறைவாக உள்ள பப்ஜி மதனை தீவிரமாக தேடிவருகிறோம். சமூக வலைதளத் குற்றங்களைக் கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் சட்டரீதியாகவே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.