தமிழ்நாடு

சென்னை: பூமிக்கு அடியில் தொட்டிகட்டி கலப்பட எண்ணெய்யை பதுக்கி வைத்த வியாபாரி!

webteam

சைதாப்பேட்டை அருகே எண்ணெய் கடையில் பூமிக்கு அடியில் தொட்டிகட்டி எண்ணெய்யை சேகரித்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பிள்ளையார் கோவில் தெரு அருகில் உள்ள எண்ணெய் கடையில் பூமிக்கு அடியில் தொட்டி கட்டி எண்ணெய்யை சேகத்திரித்து அதில் இருந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணெய் கடையில் சோதனை மேற்கொண்டனர். அதில், தரமற்ற கலப்பட எண்ணெய்யை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கலப்பட எண்ணெய்யை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.