தமிழ்நாடு

எண்ணெய் கசிவு பாதிப்புக்கு ரூ.15 கோடி நிவாரணம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

webteam

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு அருகே இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.15 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், ரூ.75 லட்சம் மதிப்பில் எர்ணாவூர் மற்றும் நொச்சிக்குப்பத்தில் மீன்சந்தைகள் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.