தமிழ்நாடு

மருத்துவ சீட்டு வாங்கித்தருவதாக மோசடி - பெண் கைது

webteam

மருத்துவ படிப்பிற்கு கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

தனியார் கல்லூரியில் சீட்டு வாங்கித்தருவதாக குரோம்பேட்டையை சேர்ந்த செல்லதங்கம் எனும் பெண், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் வில்சன் என்பவரிடம் 30 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் கல்லூரி சீட்டு வாங்கித்தராமல் அந்தப்பெண் தொடர்ந்து வில்சனை ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து வில்சனை கேட்டபோது, 19 லட்சத்து நாற்பதாயிரம் பணத்தை அந்த பெண் திருப்பி கொடுத்துள்ளார். மீதிப்பணத்தை கொடுக்காமல் வெகுநாட்களாக ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் வில்சன், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பணம் பெற்று ஏமாற்றிய செல்ல தங்கத்தை கைது செய்தனர். இதனையடுத்து செல்ல தங்கம் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.