தமிழ்நாடு

சென்னை: பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது - 4 பெண்கள் மீட்பு

kaleelrahman

சென்னையில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் 4 பெண்களை மீட்டனர். ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

சென்னை அடையாறு காமராஜர் 2வது அவென்யூவில் உள்ள ஸ்பா ரிலாக்சா என்ற ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக அடையார் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேரில் சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரமேஷ் (34), என்ற நபர் 4 பெண்களை வைத்து பாலியல் தொழிலில் நடத்தியது தெரியவந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட 4 பெண்களையும் விசாரணை செய்ததில் ஸ்பாவில் வேலை தருவதாக கூறி அழைத்து வந்து பின்பு அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அப்பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பெண்களையும் மீட்ட தனிப்படையினர் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மேலாளர் ரமேஷ் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.