தமிழ்நாடு

சிஏஏ விவகாரத்தில் அனுமதியின்றி போராடினால் அப்புறப்படுத்துங்கள்: டிஜிபிக்கு உத்தரவு

Rasus

சி.ஏ.ஏ. விவகாரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தால் போக்குவரத்துக்கு பாதிப்பு என தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சி.ஏ.ஏ. விவகாரத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.