தமிழ்நாடு

சுபஸ்ரீ வழக்கு : ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்

webteam

சென்னையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சாய்ந்ததால் நேர்ந்த விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ என்பவர் கடந்த செப்டம்பர் மாதம், பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயகோபால் மற்றும் மேகநாதன் என்பவர் சரணடைந்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், ஜெயகோபால் மற்றும் மேகநாதன் ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஏழை நோயாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மதுரையில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேபோன்று மேகநாதன் என்பவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளிகரணையில் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.