தமிழ்நாடு

விடாமல் விரட்டும் சென்னை கனமழை!

webteam

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை இன்று பகலில் லேசாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இரவு முதல் கனமழையாக பெய்யத் தொடங்கியுள்ளது.

சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் மக்களின் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளதால், இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் மற்றும் மாநகாரட்சி அதிகாரிகள் பலரும் பல்வேறு இடங்களில் மீட்புப்பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே சென்னையில் இன்று பகல் நேரத்தில் ஓய்ந்திருந்த மழை, மாலை 6 மணியளவில் லேசாக தொடங்கி கனமழையாக மாறியுள்ளது. அதன்படி ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, போரூர், குன்றத்தூர், கொரட்டூர், மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை, நந்தனம், மெரினா, ராயாபுரம், புரசைவாக்கம், அம்பத்தூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.