தமிழ்நாடு

விதிகளை பின்பற்றவில்லை; ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

webteam

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது

தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்தாலும் சில தளர்வுகளுடன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கடைகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இந்நிலையில் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்காதது, கிருமிநாசினி தெளிக்காதது போன்ற காரணத்தினால் தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது