தமிழ்நாடு

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற உத்தரவு

JustinDurai

சென்னையில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள், விளம்பரத் தட்டிகள் மற்றும் சுவரொட்டிகளை கட்டுமானத்துடன் அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி, சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து விதிகளின்படி அபராதத் தொகையோ அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தோ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை மேற்கொண்டதன் விவரத்தினை அறிக்கையாக மாநகர வருவாய் அலுவலருக்கு தனிநபர் மூலம் இன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.