பெண்கள் விடுதி
பெண்கள் விடுதி PT
தமிழ்நாடு

சென்னை: விடுதியில் இருந்து திடிரென காலிசெய்ய சொல்லி வற்புறுத்துவதாக புகார்! நள்ளிரவில் போராட்டம்

PT WEB

பெண்கள் விடுதியிலிருந்து, திடிரென காலி செய்ய சொல்வதாக கூறி விடுதி மாணவிகள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ராயப்பேட்டை ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரிக்கு எதிரே உள்ள தெருவில் அதே பகுதியை சேர்ந்த உமா ஆனந்தி என்பவர் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்தார். இந்நிலையில், அந்த கட்டிடத்தின் உரிமையாளாருக்கும் வாடகைதாரருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கட்டிடத்தை காலி செய்யுமாறு நீதிமன்றம் உத்திரவிட்டு இருக்கிறது.

இதனால் மகளிர் அறையில் தங்கியிருந்த அனைவரும் திங்கள்கிழமைக்குள் காலி செய்யுமாறு உமா ஆனந்தி பெண்களை நிர்பந்தித்துள்ளார்.

திடீரென அறையை காலி செய்ய சொன்னதால், அவகாசம் கேட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.