சென்னையில் இருசக்கர வாகனத்தில் தனது குழந்தைக்கும் தலைக்கவசம் அணிவித்து அழைத்துச்சென்ற தந்தைக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அயனாவரத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் தான் இந்தப் பாராட்டுதலை பெற்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற நடைமுறைக்கு முன்மாதிரியாக ஜனார்த்தனன் திகழ்வதாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து ஜனார்த்தனன் மற்றும் அவரது மூன்றரை வயது குழந்தையை நேரில் அழைத்து காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், கூடுதல் காவல்துறை ஆணையர் அருண் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.