தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

jagadeesh

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடிதம் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குநரின் அலுவலகத்துக்கு, இன்று பிற்பகல் கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த தகவலை உறுதி செய்த ரயில்வே போலீசார், தற்போது ரயில் நிலையத்தில் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர் குழுவுடன் சோதனை நடைபெற்று வருகிறது.

கடிதத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், கொச்சின் விமான நிலையம், டிஜிபி அலுவலகம் ஆகியவற்றில் 1-ம்தேதி மனித வெடிகுண்டாகவோ கார் குண்டாகவோ தாக்க இருப்பதாக அடையாளம் தெரியாத நபரிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக ரயில்வே போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.