தமிழ்நாடு

வேரோடு முறிந்து மின் கம்பத்தின் மீது விழுந்த மரம்: நங்கநல்லூரில் மின்சாரம் துண்டிப்பு

kaleelrahman

நங்கநல்லூரில் கன மழையால் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில் மின் கம்பம் ஒன்றும் சாய்ந்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சென்னை நங்கநல்லூர் 3வது பிரதான சாலையில் கன மழையின் காரணமாக பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது அருகில் உள்ள மின்கம்பம் ஒன்றும் சாலையில் விழுந்தது. தொடர் கன மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்து வருகிறது.

இதையடுத்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மரம் முழுமையாக அகற்றப்பட்ட பின் மின்கம்பம் சரிசெய்யும் பணியில் ஈடுபட போவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.