தமிழ்நாடு

லலிதா ஜுவல்லரி-யில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டாத வருவாய் கண்டுபிடிப்பு

Veeramani

சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் ரூ.1000 கோடி அளவிற்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறார்.

இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தகவல். தங்க வியாபாரி மற்றும் சில்லறை நகைக்கடை என இரு நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, மும்பை, கோவை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் சோதனை நடைபெற்றது.

தங்க வியாபாரி கணக்கில் காட்டாத பணம், போலியான வருவாய் கணக்கு, போலி கணக்குகளில் பண வரவு போன்றவை தெரியவந்திருப்பதாக வருமானவரித்துறை தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.