death
death pt desk
தமிழ்நாடு

செங்கல்பட்டு: காரும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

webteam

மதுராந்தகம் வன்னியர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர் தனது நண்பர்களுடன் காரில் எல்லையம்மன் கோவிலில் இருந்து வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே எல்.என்.புரம் பகுதியில் எதிரே வந்த வேன் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், காரில் பயணம் செய்த புருஷோத்தமன் அவரது நண்பர்கள் வெங்கடேசன், குருமூர்த்தி மற்றும் பூவரசன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

accident

வேனில் பயணம் செய்த டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் பயணம் செய்த ரகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.