தமிழ்நாடு

செய்யாறு: ஏரியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு 

kaleelrahman

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பாப்பாதாங்கல் ஏரி நீரில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் 3பேர் உயிரிழந்துள்ளனர். 

செய்யாறு ஒன்றியம் சிறுங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. கூலித் தொழிலாளியான இவரது மகன்கள் வரதராஜ் (12), வருண்குமார் (10) வரதராஜ், தட்சிணாமூர்த்தி என்பவரின் மகன் சுதாகர் (7) ஆகிய மூன்று சிறுவர்களும் கிராமத்தின் அருகே உள்ள பாப்பாதாங்கல் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது மூவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் செய்யாறு டிஎஸ்பி செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு, மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ அருள்மொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் சடலத்தை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.