தமிழ்நாடு

"நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வு" - ஆய்வாளர் வெளியிட்ட தகவல்

Veeramani

மார்ச் 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வு.

தமிழ்நாட்டில் அரிதான நிகழ்வாக வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மார்ச் மாதத்தில் தமிழகத்தில் அதிக மழை பொழிவது அரிது, மார்ச் மாதம் தமிழகத்திற்கு வறட்சியான காலம். கடந்த 150 ஆண்டுகளில் 2008 மற்றும் 1984 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பொழிந்து உள்ளது" என தெரிவித்துள்ளார்