தமிழ்நாடு

நீலகிரியில் 3 செ.மீ மழைப்பதிவு - இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

webteam

தென்தமிழக மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது , “ கேரளாவை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

வரும் 20 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி பில்லிமலை எஸ்டேட் பகுதியில் 3 செ.மீ மழைபதிவாகியுள்ளது.