தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வட தமிழகத்தில் மீண்டும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்தாலும் புயலாக மாறாது என்றும் வட கடலோரம், டெல்டா மாவட்டங்களில் வரும் 11 - 14 ஆன் தேதி வரை பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.