தமிழ்நாடு

‘சார்.. கீழே 50 ரூபாய் நோட்டுகள் கெடக்குது பாருங்க’.. காண்ட்ராக்டரை திசைதிருப்பி கொள்ளை!

சங்கீதா

திருநின்றவூரில் ஐம்பது ரூபாய் நோட்டுகள் சாலையில் கீழே சிதறிக் கிடப்பதாக கூறி, கவனத்தை திசை திருப்பி பில்டிங் காண்ட்ராக்டர் தியாகராஜன் என்பவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராஜன் என்பவர் திருநின்றவூரில் லேபர் காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவர் திருநின்றவூர் ஐ.ஓ.பி. வங்கியிலிருந்து ஒரு லட்ச ரூபாய்  எடுத்துக்கொண்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தின் முன்பக்க டேங்க் கவரில் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருதுள்ளார். அப்போது இவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தங்களின் பணம் 50 ரூபாய் கீழே சிதறிக் கிடப்பதாக கூறி விட்டு சென்றுள்ளனர்.

இதனை அடுத்து தியாகராஜன் வாகனத்தை நிறுத்திவிட்டு, சிதறிக்கிடந்த ஐந்து, பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துள்ளார். அப்போது அவருடைய இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. இதனடிப்படையில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.