தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரத்திற்கு வலைவிரிக்கும் சிபிஐ - 5 நாடுகளுக்கு கடிதம்!

webteam

கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது. அவரது மகன் கார்த்தி சிதம்பரம் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற சிபிஐ முயற்சித்து வருகிறது. 

அதற்காக சிங்கப்பூர், மொரீசியஸ், லண்டன், ஸ்விட்சர்லாந்து, பெர்முடா ஆகிய 5 நாட்டு அதிகாரிகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. அந்த விவரங்கள் கிடைத்தால் அவை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முக்கிய ஆதாரமாக திகழும் என சிபிஐ கருதுகிறது.