தமிழ்நாடு

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கால்நடைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கால்நடைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

Rasus

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கால்நடைகள் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

2‌012-ஆம் ஆண்டில் சென்னையில் 12 ஆயிரத்து 771 பசு மற்றும் எருமை மாடுகள் இருந்ததாகவும், தற்போது அது 46 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக கால்நடை வளர்ப்புத்துறை இயக்குநர் குணசேகரன் தெரிவித்துள்ளார். அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 லட்சத்து 19 ஆயிரம் மாடுகள் இருந்த நிலையில், தற்போது 7 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 5 லட்சத்து 33 ஆயிரம் பசு மற்றும் எருமை மாடுகளே இருந்ததாகவும், ஆனால் தற்போது 6 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் குணசேகரன் கூறியுள்ளார். இந்த மாவட்டங்களில் பால் பொருட்கள் மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்திருப்பதே கால்நடைகள் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேவை அதிகரிப்புக்கு ஏற்ப கால்நடைகளை வளர்ப்போர் அதிகரித்ததே அவற்றின் எண்ணிக்கை உயரக் காரணமாக அமைந்துள்ளது. இதுதவிர, கடந்த 7 ஆண்டுகளாக அரசு விலையில்லாத ஆடு, மாடுகளை ஏழைகளுக்கு வழங்கி வருவதும் காரணம் என குணசேகரன் தெரிவித்துள்ளார்.