தமிழ்நாடு

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து

Sinekadhara

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி வருவதாக, கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஒரு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் விலக்கு பெற்றுள்ளார்.

இந்நிலையில் மீதமுள்ள இரு வழக்குகளில் 47 பேர் மீதான குற்றப்பத்திரிகையை வழங்குவதற்காக சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வழக்கை இன்று தள்ளிவைத்திருந்தது. அந்த வழக்குகள் நீதிபதி அலிசியா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜியை தவிர மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், துறை சார்ந்த கூட்டங்கள் இருப்பதால் ஆஜராக முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டு, இன்று ஒரு நாள் ஆஜராக விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை பத்து நாட்களுக்கு பிறகு தள்ளிவைக்கும்படியும், அப்போது ஆஜராவதாகவும் தெரிவிக்கப்பட்டது

அப்போது நீதிபதி அலீசியா "அடுத்த முறையும் இதேபோல ஏதாவது காரணத்தை கூறமாட்டீர்கள் என எப்படி நம்புவது? குற்றப்பத்திரிகை நகல் தானே கொடுக்க போகிறேன், தீர்ப்பா வழங்க போகிறேன், ஆஜராகி வாங்கி கொள்ள வேண்டிதானே? அமைச்சர் என்பதற்காக privilegesஐ எடுத்துக்கொள்ள வேண்டாம் என சொல்லி வழக்கை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டதால் வழக்குத்தொடர்ந்தோர் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, அதனை ஏற்றுக்கொண்டு உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ததாகவும் சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு இதற்கான நகலை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.