தமிழ்நாடு

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

webteam

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து, வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். பொதுமக்களின் இன்னலைக் கருத்தில் கொண்டு விரைவில் விசாரிக்க மனுதாரர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது முறையீட்டை அவசர வழக்காக ஏற்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். மனுதாரர் தனது கோரிக்கையை, மனுவாக தாக்கல் செய்தால் தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர். பொதுவாக பொதுநல மனுக்கள் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படுவது வழக்கம். ஆனால், வழக்கின் தன்மையைக் கருதி, இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.