தமிழ்நாடு

கோவை மாணவி பாலியல் வழக்கு - ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம்

கலிலுல்லா

கோவை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் பள்ளியில் பயின்றுவந்த 17 வயது மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்தது. இதில் தனியார் பள்ளியின் ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். பள்ளியின் முதல்வர்மீதும் போக்சோ சட்டத்தின்கீழ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவாகியிருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை பெங்களூருவில் காவல்துறை கைது செய்தது. இந்நிலையில், கோவை மாணவியை பாலியல்ரீதியாக துன்புறுத்திய புகாரில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.