தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

Rasus

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கூடியது, அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில் அதன் கூட்டணி கட்சிகளும் பங்கேற்றிருந்தன. இந்நிலையில் பேரணி நடத்தியது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 8ஆயிரம் பேர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.