தமிழ்நாடு

கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

webteam

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய கேரளாவிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த சசி இவரது மனைவி விஜயம்மாள் உள்ளிட்ட 8 பேர் ஆம்னி காரில் சாமி தரிசனம் செய்ய பழனிக்கு வந்துள்ளனர். சிந்தலவாடம்பட்டி அருகே கார் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசி, விஜயம்மாள் உள்ளிட்ட 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சஜினி, லேக்கா ஆஜித்யன் உள்ளிட்ட மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் லேக்கா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் பழனி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.