(கோப்புப்படம்)
நிவர் புயல் கரையை கடந்ததால், சென்னையில் மாநகர பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன
'நிவர்' புயலானது நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. சென்னையின் புறநகர் பகுதிகளில் காற்றின் வேகமாக சற்று அதிகமாக் உள்ளது.
(கோப்புப்படம்)
நகரின் உட்பகுதியில் லேசான தூறலுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன