தமிழ்நாடு

ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் - மாநகர போக்குவரத்து கழகம்

jagadeesh

சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னையில் 3000 பேருந்துகளில், 6,300 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமாக உள்ள சூழலில், பொதுமக்களுடன் தினமும் நேரடியாக தொடர்பில் இருப்பதால், 45வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.