தமிழ்நாடு

கொளுத்தும் வெயில்: குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்

kaleelrahman

விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல்மழை பெய்து வரும் நிலையில், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. இதில், பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது.

இந்நிலையில், ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் விழுந்ததால் நீண்ட நாளுக்குப் பின்னர் மிக அதிகமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் பெண்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. இரண்டு ஆண்டு சீசன் காலம் கொரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்த நிலையில், இரண்டு ஆண்டுக்குப் பின்னர் நேற்று ஐந்தருவியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.