தமிழ்நாடு

சூளகிரியில் நடைபெற்ற எருதுவிடும் விழா: போட்டிபோட்டு காளையை அடக்கிய காளையர்கள்

kaleelrahman

ஒசூர் சூளகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் கட்டுக்கடங்காத இளைஞர் கூட்டத்திற்கிடையே சீறிப் பாய்ந்த காளைகள். இளைஞர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள திருமலகவுனிக்கோட்டா கிராமத்தில் மாட்டுப் பொங்கலை ஒட்டி இன்று மாபெரும் எருதுவிடும் விழா நடைப்பெற்றது. இதில், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் அதிகமான காளை மாடுகள் வாடி வாசல் வழியாக அவிழ்ந்து விடப்பட்டன.

இதைத் தொடர்ந்து கட்டுக்கடங்காத இளைஞர்களுக்கு மத்தியில் கொம்புகளில் வண்ண தடுக்கைகளை கட்டிக்கொண்ட காளை மாடுகள் சீறி பாய்ந்தன. நேருக்குநேராக வந்த காளைகளை அடக்க இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.

இதில் காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர். இந்த மாபெரும் எருதுவிடும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.