தமிழ்நாடு

தஞ்சை: பெற்றோர் கைவிட்ட கொடூரம்; தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை

தஞ்சை: பெற்றோர் கைவிட்ட கொடூரம்; தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை

webteam

தஞ்சையில் பெற்றோர் கைவிட்டதால் மனமுடைந்த அண்ணன், தங்கை ஆகிய இருவரும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த கனகராஜ், காந்திமதி தம்பதிக்கு திருமணமான ஆறு ஆண்டுகளில் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு இந்துமதி, கனகராஜ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர்களை, சில தினங்களுக்கு முன்பு தந்தையுடன் சென்று விடுமாறு காந்திமதி கூறியதாக தெரிகிறது.

இதனால் இருவரும் தந்தையை சந்திக்கச் சென்றனர். அப்போது, சொத்துக்காக இங்கே வருகிறீர்களா எனக் கூறி தந்தை கனகராஜ் துரத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். தகவலறிந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)