தமிழ்நாடு

காணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் சடலமாக மீட்பு!

webteam

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 4 மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்

ஜனவரி 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து ஒரே படகில் சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்கள் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்துக்கப்பல் மோதியதாகவும், இதில் படகு கவிழ்ந்ததாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில் காணாமல்போன 4 பேரும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று இரு மீனவர்களின் உடல் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவரின் உடலை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. 3 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சாம்சன் என்ற மீனவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ரோந்துக் கப்பலால் மோதி மீனவர்களை நடுக்கடலில் தத்தளிக்க விட்டு சென்றதாக இலங்கை கடற்படை மீது மீனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மீனவர்களின் உயிரிழப்பு புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.