செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அங்காளம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலை சுற்றி வலம் வந்து தாலாட்டு மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்தார்.
இதையடுத்து பம்பை ஒலி முழங்க தாலாட்டு பாடலுடன் ஊஞ்சலில் அம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அங்காள பரமேம்வரி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.