தமிழ்நாடு

கொடுங்கையூரில் தீயணைப்பு வீரருக்கு உதவி செய்த பாஸ்கர் இறப்பு video

webteam

செல்ஃபி மோகத்தால் கொடுங்கையூர் தீ விபத்தில் பொதுமக்கள் சிக்கியதாக கூறப்படும் சூழ்நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கு உதவ முயன்ற பாஸ்கர் என்ற நபர் இறந்துபோய் உள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.

பலியான பாஸ்கர் தீ விபத்திற்குள்ளான பேக்கிரி கடையின் அருகில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். தீ பிடிப்பதை அறிந்தது தீயணைப்பு வீரர்களுக்கு தண்ணீர் பைப் எடுத்துக் கொடுத்து சமூகப் பணியில் ஈடுபட்டபோது சிலிண்டர் வெடித்ததில் தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து என்றாலே அதனை வேடிக்கை பார்ப்பதும், செல்ஃபி எடுக்கும் நபர்களின் மத்தியில் சமூக அக்கறையோடு தீயை அணைக்க உதவிய இந்த பாஸ்கர் போன்றோர் பணி நீங்காத ஒரு புகழாக இருக்கும் என்கின்றனர் அவரது நண்பர்கள்.