தமிழ்நாடு

ஆவடி: சாலை விபத்தில் உயிரிழந்த காதலன்! பிரிவை தாளமுடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு!

webteam

ஆவடி அருகே சாலை விபத்தில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல், காதலி எடுத்த விபரீத முடிவு அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆவடி கோயில்பதாகை பூம்பொழில் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வினோதினி (22). இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் எம்.பி.ஏ படித்து வந்தார். இதற்கிடையில் வினோதினி ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை கரிமேடு பகுதியில் வசிக்கும் வசந்த் (23) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் வசந்த் உயிரிழந்தார்.

இதையடுத்து வினோதினி மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், வசந்தின் பிரிவை தாங்க முடியாமல் தவிந்து வந்த வினோதினி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார், சடலத்தை மீட்டு உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் உயிரிழப்பை தாங்க முடியாமல் மன உளைச்சலில் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.