தமிழ்நாடு

விளைநிலத்தில் ஆட்டோவை கட்டிப் போரடித்த விவசாயி - வீடியோ!

webteam

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள ஆரணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், ஒரு ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார். பருவம் தவறிப் பெய்த மழையால் பயிர்கள் பெருமளவில் வீணான நிலையில், எஞ்சிய பயிரை போரடிக்க மாடு கிடைக்காததால், தனக்கு சொந்தமான ஆட்டோவையே அவர் பயன்படுத்தினார்.