தமிழ்நாடு

"ஆளுநர் மீதான தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் முதல்வர்?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி

sharpana

”தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீதான தாக்குதல் சம்பவத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில் சாதாரண மக்களுக்கு இந்த அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.