கரூர் மக்கள்
கரூர் மக்கள் PT
தமிழ்நாடு

"ஊருக்குள் அடிப்படை வசதியே இல்லை” - கருப்புக் கொடி காட்டி தேர்தலை புறக்கணிக்கும் கரூர் கிராம மக்கள்!

PT WEB

கரூர் அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராம மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விஸ்வநாதபுரம் கிராமத்தில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை என கூறும் அம்மக்கள் வரும் தேர்தலை புரக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்கள் எதிர்ப்பைக்காட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் உள்ளனர். சாலை அமைப்பது தொடர்பான ஒரு பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது முடிந்த பிறகே நடவடிக்கை எடுக்கமுடியும் என குளித்தலை கோட்டாச்சியர் தெரிவித்தார்.