தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபி சந்திப்பு

webteam

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபி கந்தசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

முதலமைச்சருடன் 15 நிமிட ஆலோசனைக்குப் பிறகு லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி கந்தசாமி புறப்பட்டுச் சென்றார். இதனிடையே கோவை குனியமுத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 11 மணி நேரமாக நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு பெற்றுள்ளது.