தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு நெருப்புக்கோழி உயிரிழப்பு

webteam

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு நெருப்புக் கோழி உயிரிழந்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் ஏற்கெனவே 5 நெருப்பு கோழிகள் இறந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் இன்று மேலும் ஒரு நெருப்புக் கோழி உயிரிழந்தது.

இதுவரை 36 நெருப்புக் கோழிகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை 9 கோழிகள் உயிரிழந்துள்ளது. நெருப்புக்கோழிகள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து அறிய போபாலில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.