தமிழ்நாடு

தஞ்சையில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

rajakannan

தஞ்சை மாவட்டத்தில் மேளும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 11 பள்ளிகளில் 168 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

புதிதாக பள்ளி மாணவர்கள் 12, கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கும்பகோணம் சரஸ்வதி பள்ளியில் 10, மாரியம்மன் வீதி அரசு பள்ளியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.