Annamalai pt desk
தமிழ்நாடு

நயினார் சொன்ன ஒரே வார்த்தை... அண்ணாமலை செய்த சம்பவம்! மேடையில் நடந்தது என்ன..?

புதிய மாநில தலைவராக பொறுப்பேற்ற அடுத்த நொடி நயினார் நாகேந்திரன் சொன்ன வார்த்தையை கேட்டு அண்ணாமலை செய்த சம்பவம் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது...மேடையில் நடந்தது என்ன பார்க்கலாம்!

PT WEB

‘‘தி​முக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன்’’ அண்ணாமலை சபதம்:

கடந்த 2024 டிசம்​பர் மாதம் அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்​கொடுமை தொடர்​பான எஃப்​ஐஆர் காப்பி பொது வெளி​யில் கசிந்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. அப்போது கோவை​யில் செய்​தி​யாளர்​களை சந்​தித்த​ அண்​ணா​மலை இந்த விவகாரத்திற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி ‘‘தி​முக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன்’’ என சபதம் ஒன்றையும் எடுத்​துக்​கொண்​டார்.

Annamalai

நயினார் நாகேந்திரன் கோரிக்கை:

அதனைதொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அண்ணாமலை காலணி அணிவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்​நிலை​யில், தமிழக பாஜக தலை​வ​ராக பொறுப்​பேற்ற நயி​னார் நாகேந்​திரன் விழா மேடை​யில் பேசினார், ‘‘திமுக ஆட்​சியை அகற்​றும் வரை காலணி அணிய மாட்​டேன் என் அண்​ணா​மலை சபதம் ஏற்​றார். ஆட்சி மாற்றத்​துக்​காக அமித் ஷா அடிக்​கல் நாட்​டி​விட்​டார். அதனால், அண்ணா​மலை மீண்​டும் காலணி அணிந்​து​கொள்ள வேண்​டும்’’ என வேண்டு​கோள் வைத்தார்.

நெட்டிசன்கள் கமெண்ட்:

அதுமட்டுமின்றி புதி​தாக வாங்கி வந்த காலணியை அண்​ணாமலை​யிடம் கொடுத்​தார். அடுத்த நொடியே நயி​னார் நாகேந்திரன் விடுத்த வேண்​டு​கோளை ஏற்​றுக் கொண்டு நயினார் கொடுத்த காலணி​யை வாங்கி அணிந்​து​ கொண்​டார்​ அண்​ணாமலை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..வீடியோ பார்த்த நெட்டிசன்கள் பலரும் "தனது சபதத்தை முடித்துக்கொண்டாரா அண்ணாமலை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.