ஆந்திராவில் தொடர் மழை கொட்டி வரும் நிலையில், வீடுகளிலும் வெளியிலும் தவளைகளாக காணப்படுவதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அனந்தபூர் மாட்டம் குத்தி பகுதி மக்கள் இப்படியொரு பிரச்னையை சந்திக்கின்றனர். இதனால் சாலைகள், விளை நிலங்கள் மட்டுமின்றி, வீடுகளின் சுவர்களும் 'தவளை' மயமாக காட்சியளிக்கிறது.
வீட்டின் பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் தண்ணீரிலும் தவளைகள் நீந்துகின்றன. இவற்றை எப்படி கையாளுவதென தெரியாமல் 'குத்தி' பகுதி மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.