தமிழ்நாடு

18 மணிநேரம் நடுக்கடலில் தவித்த அந்தமான் மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை!

Sinekadhara

இந்திய கடலோர காவல்படையினரால் நடுக்கடலில் மீட்கப்பட்ட அந்தமான் மீனவர்கள் 5 பேர் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு இன்று அதிகாலை அழைத்துவரப்பட்டனர். நடுக்கடலில் பழுதாகி நின்ற படகை கவனித்த இந்திய கடலோர காவல்படையினர், 18 மணிநேரமாக கடலில் தவித்த மீனவர்களை மீட்டனர்.