தமிழ்நாடு

சென்னை: தேங்கியிருந்த மழை நீரில் அறுந்த கிடந்த மின்கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுனர் பலி

webteam

வியாசர்பாடியில் துக்க நிகழ்ச்சிக்குச் சென்ற இடத்தில் மழை நீரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்தார். 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தேவேந்திரன் என்பவர் வியாசர்பாடி பிவி.காலனி 18-வது தெருவில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அந்தப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சார கம்பி விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாமல் மிதித்த தேவேந்திரன் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வியாசர்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து உயிரிழந்த தேவேந்திரன் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.