தமிழ்நாடு

சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆதரவாளர்கள்

Veeramani

பெங்களூருவிலிருந்து இன்று சென்னை திரும்பும் சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை காலம் முடிந்து சசிகலா இன்று தமிழகம் திரும்புகிறார். சாலை மார்க்கமாக அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் அவர் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். வழிநெடுக அவரது ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அத்துடன் அவரின் காருக்கு பெண்கள் ஆரத்தியும் எடுத்து வரவேற்றனர்.