தமிழ்நாடு

திண்டுக்கல்: திடீரென வேலையிலிருந்து விடுவிப்பு? - அம்மா உணவக பெண்கள் சாலைமறியல்

kaleelrahman

திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பணியாற்றிய 20 பெண்களை திடீரென வேலையில் இருந்து நிறுத்தியதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கலில், அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த 2 உணவகங்களிலும் 24 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி 24 பேரையும் வேலையை விட்டு நிறுத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

திடீரென வேலையை விட்டு நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நியாயம் வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் சென்று தங்கள் பிரச்னையை தெரிவிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.